புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2021

யாழில் அதிர்ச்சி சம்பவம் - அரியாலை – பூம்புகார் பகுதியில்இளம் கணவனை அடித்து கொன்ற மனைவி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் இளம் கணவனை அடித்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றிரவு குடும்ப முரண்பாடு முற்றியமையினால் அது வன்முறையாக மாறியது.
இந்நிலையில் மனைவியின் கடுமையான தாக்குதலுக்குள்ளான 32 வயதான துரைராசா செல்வராசா என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.
மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றியது. இந்த நிலையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்தனர்

ad

ad