நேற்று காலை, கலாயிஸ் பகுதியில் ஒரு சிறிய படகு கரையொதுங்கியுள்ளது. தண்ணீர் நிறைந்திருந்த அந்த படகில் புலம்பெயர்ந்தோர் ஒருவரின் உயிரற்ற உடல் இருப்பது தெரியவந்தது. அதே படகில் குளிர் காரணமாக ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். ஒரு நாளைக்கு முன்பு, இதேபோல் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற ஒரு புலம்பெயர்ந்தோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும், மற்றொரு புலம்பெயர்ந்தோர் மாயமானதும் குறிப்பிடத்தக்கது. அதே நாளில், பல படகுகள் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து, 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். |