புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2021

0 ஓவர் உலக கோப்பை: ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியாஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது

www.pungudutivuswiss.com
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி இந்தியா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இந்திய அணியின் துல்லிய பந்து வீச்சாள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸ்காட்லந்து அணி 17.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழந்து 85 ரன்கள் எடுத்தது. இந்தியா அணி சார்பில் ஜடேஜா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை இந்திய அணி துவக்கியது. துவக்கம் முதலே ஸ்காட்லாந்து பந்து வீச்சை இந்திய அணி புரட்டியெடுத்தது. குறிப்பாக கே.எல் ராகுல் ஆட்டத்தில் அனல் பறந்தது. கே.எல் ராகுல் பேட்டில் பட்ட பந்துகள் அனைத்தும் சிக்சரும் பவுண்டரிகளுமாக பறந்தன. 6.3 ஓவர்களில் 89 ரன்கள் அடித்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. 19 பந்துகளில் கே.எல் ராகுல் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.

ad

ad