புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2023

யாழ்ப்பாணம் முற்றாக முடங்கியது

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால்  விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில்  பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையம், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி,ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, முனிஸ்வரா வீதி, கே.கே.எஸ் வீதி ஆகியவற்றில் கடைத்தொகுதிகள் மூடப்பட்டு காட்சியளித்தன.

வெறிச்சோடிய நிலையில் யாழ்ப்பாணம் மத்திய நகரப்பகுதி காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. அரச நிறுவனங்கள் அனைத்தும் திறந்துள்ளன. தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை.

நெல்லியடி, பருத்தித்துறை, சாவகச்சேரி, கொடிகாமம், நகரங்களும் இயல்பு நிலையை இழந்திருந்தன.

   
   Bookmark and Share Seithy.com

ad

ad