புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2025

மூளாயில் குழு மோதல் - பொலிஸ் துப்பாக்கிச் சூடு! [Monday 2025-07-21 07:00]

www.pungudutivuswiss.com


வட்டுக்கோட்டை- மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் தனி நபர்களுக்கிடையே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்ற பின்னர்  ஞாயிற்றுக்கிழமை இரண்டு தனிநபர்களும் இரு பிரிவுகளாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

வட்டுக்கோட்டை- மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் தனி நபர்களுக்கிடையே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்ற பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தனிநபர்களும் இரு பிரிவுகளாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

ad

ad