கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் மற்றுமொரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று நேபாளத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இஷாரா செவ்வந்தியுடன் மற்றைய சந்தேகநபர்களும் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் அறை இலக்கம் 5 நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த கொலை கெஹல்பத்தர பத்மேவின் குழுவால் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்தது.