உண்மையில், அவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிலிருந்து வந்து ஜெனீவாவில் படிப்பவர்கள். இந்நிலையில், அடுத்த ஆண்டிலிருந்து, ஜெனீவாவுக்கு வெளியே இருந்து வரும் மாணவ மாணவியரை ஜெனீவா பள்ளிகளில் சேர்ப்பதில்லை என ஜெனீவா மாகாண கவுன்சில் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், மாகாண கவுன்சிலின் முடிவை கல்வி ஆணையமும் உறுதி செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டிலிருந்து ஜெனீவாவுக்கு வெளியே இருந்து வரும் மாணவ மாணவியர் ஜெனீவா பள்ளிகளில் சேர்க்கப்படமாட்டார்கள் என மாகாண அரசு தெரிவித்துள்ளது. |