தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஈழத் தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புக்களை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.