புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012

தனுசின் மகன் யாத்ரா மற்றும் பிரபல பாடகர் யேசுதாசின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாசும் சபரிமலைக்கு சென்றனர். 
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதனால் அங்கு கூட்டம்
அலைமோதும்.

எனவே முக்கிய பிரமுகர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் நாட்களில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பனை தரிசிக்க தமிழகத்தில் இருந்து நடிகர்கள் பலரும் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வார்கள்.

நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு சபரிமலைக்கு தீர்த்த யாத்திரை சென்றார். இந்த ஆண்டும் அவர் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவர் மலையாள படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கான படப்பிடிப்பு தொடக்க விழா நேற்று கொச்சியில் நடந்தது. 

இதில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து நேராக சபரிமலைக்கு சென்றார். அவருடன் தனுசின் மகன் யாத்ரா மற்றும் பிரபல பாடகர் யேசுதாசின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாசும் சபரிமலைக்கு சென்றனர். 

அங்கு மூவரும் இருமுடி கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர். அய்யப்பன் கோவில் நடை நேற்று உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பிறந்தநாள் விழாவுக்காக திறக்கப்பட்டிருந்தது. எனவே கோவிலுக்கு சென்ற தனுசும், மகன் யாத்ரா, பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் மூவரும் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர்.

ad

ad