இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக தொடர அனுமதி கோரி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
6வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது.