புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2012


மட்டக்களப்பு தபால் மூல வாக்களிப்பில் தமிழரசுக்கட்சி வெற்றி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி, மெதடிஸ்த மத்தியகல்லூரி ஆகியவற்றில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் தற்போது எண்ணி முடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடாத போதிலும் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமற்ற வகையில் எமக்கு கிடைத்த முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 3,219
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1,428
முஸ்லிம் காங்கிரஸ் 454
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்  170
ஐக்கிய தேசியக் கட்சி 63

கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள்- தபால் மூல வாக்களிப்பு முடிவு 

கிழக்கு மாகாண தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தபால் மூல வாக்களிப்பில் முன்னணியில் உள்ளது. அம்பாறையில் இரண்டாம் இடத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சமனான நிலையில் உள்ளன.

கனடாவில் நடைபெற்ற தமிழீழ சுற்றுக்கிண்ணம் - உதைபந்தாட்ட போட்டி
 கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுக் குழு, கனேடிய தமிழர் விளையாட்டுத் துறையுடன் இணைந்து நடாத்திய தமிழீழ சுற்றுக்கிண்ணம் - உதைபந்தாட்ட போட்டி.. செப்டம்பர் மாதம் முதலாம் திகதி, (01 - 09 - 2012 ) L'Amoreaux விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக

தேசிய வீராங்கனை பிருந்தா இராமசாமி..
Se
 பெற்றவர்களையும் தான் பிறந்த தேசத்தையும் பெருமை படுத்துவதே ஒரு குழந்தையின் மிக உயர்ந்த செயலாகும். அந்த பெருமையை நம் ஊருக்கும் தான் பிறந்த கனடிய தேசத்திற்கும் தேடி தந்திருக்கிறார் பன்னிரண்டு வயதே நிரம்பிய பிருந்தா இராமசாமி, டெனிஸ் வீராங்கனை. செல்வி பிருந்தா

கிழக்கின் தேர்தல்: பிள்ளையானின் தோல்வி; TNAயின் வெற்றி?
 •  ‘பிள்ளையான்’ என்கிற முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் குறுகியகால அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கான மிகமுக்கிய படியாக இருக்கும். 

தேர்தல் களமும், தாயகத் தமிழரின் பங்கும்
எமது தாயகத்தின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவதன் மூலம் சிங்களப் பேரினவாதம் தனது யுத்த வெற்றியாக வெளிக்காட்ட முற்படுவதோடு, தனது நீண்டகால நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழர் நிலப்பரப்பை அபகரித்து, அதில் சிங்களக் குடியேற்றங்களையும் பௌத்த விகாரைகளையும் அமைத்து சிங்கள பௌத்த தேசமாக்குவதற்கே முனைகிறது.
இதற்கு தமது திட்டங்களுக்கு இசைந்து போகும் சில சுயநலம் கொண்ட தமிழினத் துரோகிகளை கைப்பொம்மைகளாக வைத்து சிங்களப் பேரினவாதம் செயற்படுகிறது.
இத்தேர்தலில் பங்குகொள்வதன் ஊடாக எமது மக்களுக்கான விடுதலையையோ அல்லது இதற்கான அடிப்படைக் காரணிகளையோ ஏற்படுத்த முடியாது என்பது யதார்த்தம். இருப்பினும் தனது அதிகார பேரினவாத வெளிப்பாடாக மக்களின் கருத்துக்களைப் புறந்தள்ளி சிங்கள அரசு நடாத்தும் இத்தேர்தலை புறக்கணிப்பதன் ஊடாக சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகள் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளாக ஆளும் சூழலையோ அல்லது வாய்ப்பினையோ நாம் வழங்க முடியாது.
கலாசார சீரழிவு, பாலியல் வல்லுறவு, நில ஆக்கிரமிப்பு, காணாமல் போதல்கள், தற்கொலை எனும் பெயரால் நடக்கும் படுகொலைகளென நாளாந்தம் சொல்லொனா துயருக்குள் மக்களாகிய உங்களை வைத்து வதைக்கும் சிங்களப் பேரினவாதம், இத்தேர்தல் வெற்றி ஊடாக தமிழர்களை ஆளும் அதிகாரத்தையும் பெற்று மேலும் தமிழின அழிப்பையும், நில அபகரிப்பையும் துரிதகதியில் நடாத்தி சிங்கள மயமாக்கலுக்கு முனைகிறது.
இச்சூழலில் பிரதேசவாதத்தினையும், இன்னும் சில காரணங்களையும் முன்வைத்து இத்தேர்தலில் தாம் வெற்றிபெற வேண்டும் என்று சிலர் முற்படுவதினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறான விடையங்கள் வடக்கு, கிழக்கினை பிரிப்பதுடன் தமிழர்களின் தார்மீக விடுதலையையும் நசுக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையும். இவ்வாறான எண்ணத்துடன் நடாத்தப்படும் இத்தேர்தலில் தமிழ்த் தேசியத்தினை மறுதலிப்பவர்களை புறந்தள்ளி தமிழ்த்தேசிய உணர்வுடன் விடுதலையை நேசிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்து எமது உறுதியையும், உரிமையையும் வெளிக்காட்டும்படி அன்புரிமையுடன் பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். உங்களின் விடுதலை உணர்விற்கும் தேசிய ஒற்றுமைக்கும் புலம்பெயர் தமிழீழ மக்களாகிய நாம் என்றும் துணையாக நிற்போம்.
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

மட்டக்களப்பில் வாக்குச்சாவடிகளை நோக்கி வாக்குப் பெட்டிகள்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று காலை வாக்கெண்ணும் மத்திய நிலையத்திலிருந்து வாகனங்கள் மூலம் சகல வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான பி.எஸ்.எம். சார்ள்ஸ்

மண் உரிமை மீட்டெடுக்க! மண் மீட்க வாக்களிப்போம்!
கிழக்குமாகாணத்தில் தமிழரின் பலம் பன் மடங்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பது சகலரினதும் கடமை

இலங்கைப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் விசாரிக்குமாறு கோரிக்கை
டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


மு.க. ஸ்டாலின், உதயநிதி திஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
 
 முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க பொருளாளருமான ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மூன்றாம் நாளாக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!
இலங்கை அதிபர் இராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (7-9-2012) நாடாளுமன்ற வளாகத்திற்குள் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

தண்ணீருக்காக போர் நடக்கும் : அப்துல்கலாம் எச்சரிக்கை

முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாம் கேரளாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

குடும்ப அரசியல் விவகாரம்! விரக்தியின் விளிம்பில் பசில் ராஜபக்ச! நாட்டைவிட்டு வெளியேறினார்
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பசில் ராஜபக்‌ச சரியாக செயற்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பம் குற்றம் சுமத்தியுள்ளது.
பதிலுக்கு பசில் ராஜபக்‌சவும் தனது பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அநாவசியத் தலையீடுகளை மேற்கொள்கிறார் என கோபித்துக்குக் கொண்டுள்ளாராம்.
இதன் விளைவால் பசில் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள பசில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி, கேகாலையில் தமிழ் பிரதிநிதித்துவங்களை பெற்று காட்டுவோம்: மனோ கணேசன்
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் குறைந்த தொகை தமிழ் வாக்காளர் வாழும் நிலையில் அவர்களின் வாக்கு சிதறடிக்கப்படாவிட்டால் நிச்சயமாக தமிழ் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.

விடுதலைப்புலிகள் சார்பில் வாதாடும் சுவிஸ் சட்டவாளர்களுக்கு இலங்கை நுழைவிசைவு வழங்க மறுப்பு
விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புக்கு எதிரான வழக்கில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய சுவிற்சர்லாந்து அரச சட்டவாளர்கள் இந்த வாரம் கொழும்பு வரவுள்ளனர்.
சுவிற்சர்லாந்து அரச சட்டவாளர்கள், இலங்கையில் தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகளிடம் இந்த வாரமும் அடுத்த வாரமும் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும், இந்த விசாரணைகளில் பங்கேற்க கொழும்பு வருவதற்கு எதிர்தரப்பு சட்டவாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டது.
அரச சட்டவாளர்களுடன் ஐந்து காவல்துறை அதிகாரிகள், இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் கொழும்பு வரவுள்ளனர்.
எதிர்த்தரப்பு சட்டவாளர்களுக்கு இலங்கை அரசு நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டதால, அவர்கள் பேர்ணில் இருந்தவாறு சாட்சிகளிடம் நடத்தப்படும் குறுக்கு விசாரணைகளில் நேரலை காணொலி தொழில்நுட்பம் மூலம் பங்கேற்கவுள்ளனர்.
இதன் மூலம் சாட்சிகளிடம் அவர்கள் கேள்விகளை எழுப்ப முடியும்.
இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் விடுதலைப் புலிகளின் சட்டவாளர்களுக்கு நுழைவிசைவு வழங்க இணங்கிய போதும், இலங்கை வெளிவிவகார அமைச்சு தலையிட்டு அதை நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேங்காய் உடைப்பதை விடுத்து பேச்சுவார்த்தைக்கு செல்லுங்கள்!- கூட்டமைப்பினரிடம் பிரபா கணேசன் வேண்டுகோள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக 1008 தேங்காய்களை உடைப்பதை தவிர்த்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமாக பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என தமிழ் கூட்டமைப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் என
சிரியாவில் ஈரானின் படைகள்: இரகசியமாக உதவுவது அம்பலம்
சிரியா அரச படையினருக்கு ஆதரவாக 150 படை வீரர்களை ஈரான் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல பொப் பாடகி ஷகிராவுடனான செக்ஸ் வீடியோவில் கால்பந்து வீரர்
பிரபல கால்பந்து அணியான பார்சிலோனா அணியின் வீரர் ஜெரார்டு பிக்குவும், பிரபல கொலம்பிய பொப் பாடகி ஷகீராவும் காதலித்து வந்தனர்.

ad

ad