புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2014


30 ஆண்டுகளாக நாம் ஒரு புரட்சிகரமான தலைமையின் கீழ் வாழ்ந்தோம்: சி.சிறீதரன் எம்.பி
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத்தின் 49வது ஆண்டு நிறைவு விழாவும் வளர்மதி கல்விக்கழகத்தின் பரிசளிப்பு விழாவும் சிறப்புற நடைபெற்றுள்ளது.
வளர்மதி கலையரங்கில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், சிறப்பு விருந்தினர்களாக பரந்தன் மக்கள் வங்கி முகாமையாளர் க.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்,
கௌரவ விருந்தினர்களாக யாழ். கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை அதிபர் ஆ.தங்கவேலு, நுணாவில் மத்தி கிராம சேவகர் திருமதி.பானுசா தவேஸ்வரன், சாவகச்சேரி பிரதேசபை உறுப்பினர் தங்கராசா மற்றும் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தென்மராட்சி அமைப்பாளருமான அருந்தவபாலன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிலையத்தின் தலைவர் சி.டினேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வரவேற்புரையை உபசெயலாளர் செ.பரணிதரன் நிகழ்த்தினார்.
அறிக்கையை கல்விக்கழக பொறுப்பாசிரியர் ச.கிருஸ்ணன் வழங்கினார். சிறப்புற நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்களாக இருந்து ஆசிரிய ஆலோசகர்களாக சமாதான நீதவான்களாக உயர்வுபெறும் செ.பரணிதரன் சி.சிவதாசன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது.
நடனம் பட்டிமன்றம் உரைகள் என பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தேறின.
இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் தனது சிறப்புரையில்,
புலம்பெயர் நாட்டில் வசிக்கும் இந்த ஊரின் உறவுகளும் கலந்து சிறப்பிக்க கூடிய இந்த சனசமூக விழாவில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இத்தகைய முன்னோடியான சனசமூக நிலையங்களின் செயற்பாடு மனதுக்கு நிறைவு தருகின்றது.
நமது பண்பாட்டோடு வாழ்ந்த சமுகத்தில் வாள்வெட்டும் பாலியல் வன்முறைகளும் கொலை, கொள்ளையும் போதைப் பொருள் பாவனையும் விதைக்கப்படும் இந்த காலத்தில் அறிவு நோக்கியும் கடந்த கால எமது வரலாறு நோக்கியும் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.
நம் சமூகத்தை எப்போதும் நிம்மதியாக வாழவிடாத நிலைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். ஆனால் இத்தகைய நிலையில் இருந்த மீண்டெழ நாம் கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் ஒரு புரட்சிகரமான தலைமையின் கீழ் வாழந்தோம்.
நாம் வியக்கத்தக்க வகையில் எல்லா வல்லமைகளோடும் வாழ்ந்தோம். ஆனால் அந்த வரலாற்று உண்மையை நாம் எம் பிள்ளைகளுக்கு சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

ad

ad