புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2014


நடிகர் ஹிருத்திக் ரோஷன் விவாகரத்து வழக்கு:
மனைவிக்கு 380 கோடி ஜீவனாம்சம்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுசன்னேவை கடந்த 2000–ம் ஆண்டு டிசம்பர் 20–ந் தேதி திருமணம் செய்துகொண்டார். சுசன்னே
இந்தி நடிகர் சஞ்சய் கானின் மகள். இந்த தம்பதியினருக்கு ஹிரே கான்(வயது 7), ஹிருதான்(5) ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 6–ந் தேதி ஹிருத்திக் ரோசனின் தந்தை ராகேஷ் ரோசன் தனது 64–வது பிறந்த நா

ள் விழாவை கொண்டாடினார். அப்போது, ஹிருத்திக் ரோசனின் மனைவி சுசன்னே காலதாமதமாக வந்தார். அவருடன் அவரது தாயார் சரைன் கான், தந்தை சஞ்சய் கான் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர். இதையடுத்து நடைபெற்ற ‘கிரிஷ் 3’ படத்தின் வெற்றி விழா உள்பட எந்த நிகழ்ச்சிகளிலும் ஹிருத்திக் ரோசன் தன் மனைவி சுசன்னேவுடன் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பேசிய நடிகர் ஹிருத்திக் ரோசன், ‘‘எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை விட்டு பிரிய அவர் (சுசன்னே) தீர்மானித்துவிட்டார். இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில் என்னையும், எனது குடும்பத்தினரையும் தனிமையில் அனுமதிக்குமாறு ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார். கருத்து வேறுபாடு காரணமாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்– சுசன்னே தம்பதியினர் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக தெரியவந்தது. இந்தி நடிகர் அர்ஜூன் ரம்பாவும் சுசானேயும் நெருக்கமாக பழகுவதே இவர்கள் தகராறுக்கு காரணம் என கூறப்பட்டது. விவாகரத்துக்கான சட்ட நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.
இந்த நிலையில் விவாகரத்துக்கு சம்மதிக்க தனக்கு ஹிருத்திக் ரோஷன் ரூ.400 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று சுசானே கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷனும்  ரூ.380 கோடி சம்மதித்து விட்டாராம். ஹிருத்திக் ரோஷனுக்கு மொத்தம் ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன. ஜுகு கடற்கரையில் ஹிருத்திக் பெயரில் பிரம்மாண்ட பங்களா வீடு உள்ளது.

பெங்களூரில் 100 ஏக்கர் நிலம் உள்ளது. ஆந்தேரியில் நான்கு மாடி கட்டிடம் உள்ளது. சிங்கப்பூரில் ஒரு வீடு இருக்கிறது. இந்த வீடு சுசானே பெயரில் இருக்கிறது. இந்தி திரையுலகில் பல நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். ஆனால் எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை ஜீவனாம்சமாக வாங்கியதில்லை.

ad

ad