புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2018

வேட்பாளரை தாக்க முயன்ற கூட்டமைப்பு ஆதரவாளர்கள் நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு விடுதலை!

கிளிநொச்சி- பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரைத் தாக்குவதற்கு முயற்சித்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை கிளிநொச்சி நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்துள்ளது

வெற்றிலைக்கு விடைகொடுத்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கின்ற நிகழ்வுகளில் அவரை வரவேற்பதற்கு இன்று முதல் வெற்றிலையை பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி தீர்மானத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் எடுத்துள்ளனர்

ஈழத்தை ஆதரிக்கிறதா சுதந்திரக் கட்சி? - நாமல் கேள்வி


யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வில், விடுதலைப்புலிகளின் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டமை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ டுவிட்டர் தளத்தில் கருத்துக்களை பதிவேற்றியுள்ளார்

யாழ்ப்பாணத்தில் புலிகளின் பாடலை ஒலிக்கவிட்டு வாக்குப் பிச்சை கேட்கும் சுதந்திரக்கட்சி

யாழ்ப்பாணத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்

களுத்துறையில் கடலுக்குள் செல்லும் நீரை வடக்கிற்கு அனுப்பப் போகிறாராம் மைத்திரி

களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் உபயோகப்படுத்தப்படாமல் கடலுக்கு அனுப்ப ப்படும் நீரை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு அனுப்பும்

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் ஒளிமயமான எதிர்காலம்! - இஸ்ரோவுக்கு மோடி வாழ்த்து

இஸ்ரோ தயாரித்துள்ள 100வது செயற்கைகோள் உள்பட மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி40 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கைகலப்பு சம்பவம்

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கைகலப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய

மைத்திரி இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் – கபே

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் என்று சுதந்திரமான, நீதியான தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

ad

ad