நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் காலமானர்
இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மனைவி பச்சையம்மாள் கடந்த 2004-ம் ஆண்டு இறந்தார். காலமான லூஸ் மோகன் இறுதிச்சடங்கு சென்னை மைலாப்பூரில் நடக்கிறது. லூஸ் மோகன் மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லூஸ்மோகன் சினிமா உலகில் லட்சக்கணக்கான ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தவர். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் வாழ்க்கை நகைச்சுவையில் கலந்திருக்கவில்லை. மன உளைச்சல் காரணமாக மிகவும் வேதனைப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு லூஸ் மோகன் சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், தன்னுடைய மருமகள் காலை உணவைக் கூட கொடுக்காமல் வேதனைப்படுத்துகிறார். மூத்த குடிமகனான எனக்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் சொல்-யிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து அவர் மகன் மற்றும் மருமகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் இது சாதாரண குடும்ப பிரச்சனைதான். அவர் உடல்நலம் கருத்தில் கொண்டு ஒரு சில உணவு வகைகளை அவருக்கு கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர் சொன்னதன் பேரில் நாங்கள் கொடுக்காமல் நிறுத்தி வைத்தோம். மற்றபடி அவருக்கு உணவு கொடுக்காமல் ஒருபோதும் பட்டினி போட்டதில்லை என்று மகனும், மருமகளும் தெரிவித்தனர்.