புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2013

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நேரடியாக தலையிடுமாறு கோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழக மீனவர்கள் விஷயத்தில் கண்டு கொள்ளாமல் இருக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்கும் இந்திய அரசு, அண்மையில் குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அந்நாட்டு தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்ததாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, இலங்கை கடற்படையினரால் தாங்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்து தமிழக மீனவர்கள், தாங்கள் தனது சொந்த நாட்டு அரசாங்கத்தினாலேயே கைவிடப்பட்டுவிட்டோம் என்ற உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
மேலும், 65 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக மீனவர்கள் மீதான நடவடிக்கையை நிறுத்துமாறு இலங்கையிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad