புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2015

எனது விடுதலை சட்ட ரீதியானது; மஸ்ராத் ஆலம்


காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவராக இருப்பவர் மஸ்ராத் ஆலம். இவர் காஷ்மீரில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தொடர் போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டார். அவர் போராட்டம் நடத்தியபோது கலவரம், கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்ததால், 112 இளைஞர்கள் பலியானர்கள். 100க்கும் மேற்பட்ட போலீசாரும், பாதுகாப்பு படையினரும் காயம் அடைந்தனர். இதனால் மஸ்ராத் ஆலம் மீது 6 முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவாக இருந்த மஸ்ராத் ஆலம் பற்றி தகவல் கொடுத்தால் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்தது. கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். 

தற்போது புதிய முதல் அமைச்சராக பதவி ஏற்ற முப்தி முகமது சயீத், சிறையில் இருந்த மஸ்ராத் ஆலமை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குப்வாரா சிறையில் இருந்து சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு பாஜக, காங்கிரஸ், சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு காஷ்மீர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் மஸ்ராத் ஆலம் கூறியதாவது, எனது விடுதலை சட்ட ரீதியானது. கடந்த 4 வருடங்களாக நான் சிறையில் இருந்தேன். நான் 6 முறை கைது செய்யப்பட்டேன். தற்போது நான் ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறேன். இந்த சட்டம் காலாவதியாகிவிடும். இதில் எந்த சிறப்பு நடவடிக்கையும் இல்லை. இது சாதாரண விடுதலைதான் என்றார்.

ad

ad