புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2015

எங்கள் பிள்ளைகளை இரகசியமுகாமில் தான் வைத்திருக்கின்றார்கள்; உறவுகள் கதறல்


எனது பிள்ளையை இரகசிய முகாமில் தான் தடுத்து வைத்திருக்கின்றார்கள் உயிருடன் தான் என் பிள்ளை இருக்கின்றான் என தாயொருவர்
கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும்  சோகத்தில் ஆழ்த்தியது.

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரியும் ஐ.நா விசாரணை நீதியான முறையில் இடம்பெறவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கடந்த மூன்று தினங்களாக உணவு தவிர்ப்புப் போராட்டம்  ஒன்றினை காணாமல் போனோரின்  உறவுகள்  நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்திருந்தனர்.
இறுதி நாளான இன்றையதினம் குறித்த தாயார் எனது மகன்  உயிருடன் இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் . எனது மகன் உயிருடன் தான்  இருக்கின்றான் என வாய்விட்டு கதறியழுதார்.

மேலும் அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டது. இனிமேல் அழுவதற்கு கண்ணீர் கூட எமக்கில்லை என கூறி  அங்கிருந்த உறவுகள் அனைவரும் கதறலால் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
அத்துடன்  எங்கள் உறவுகள் தொடர்பில் அரசு பதில் வழங்காவிட்டால் சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபடப்போவதாகவும் கண்ணீர் விட்டு கதறியழுதனர். 

ad

ad