ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 39-வது நாளாக நடந்து வருகிறது. எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வழக்கறிஞர் பவானி சிங் மனுவில் தெரிவித்துள்ளார். எழுத்துப்பூர்வமான வாதத்துக்கு ஒரு வார கால அவகாசம் வழங்க முடியாது மற்றும் வரும் புதன் கிழமைக்குள் வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
புதன் கிழமைக்குள் வாதத்தை தாக்கல் செய்யாவிடில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற தனி அமர்வு நீதிபதி சி.ஆர். குமாரசாமி அதிரடி உத்தரவிட்டார்.