புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2016

மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஷில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஷில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டு
ள்ளார்.
இன்று வியாழக்கிழமை பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு சாட்சியமளிக்க சென்ற அவர் விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை பகுதியிலுள்ள காணி விவகாரம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த பஷில் ராஜபக்ச அனைத்து அமைச்சுக்களின் நிதி விவகாரங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரங்களையும் பெற்றிருந்தார்.
பஷில் ராஜபக்ச மீது பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு மாத்தறை காணி விவகாரம் தொடர்பில் கைதுசெய்துள்ளது.
ஆனால் பஷில் ராஜபக்ச மீது இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்ச தொலைக்காட்சி நிறுவன நிதி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு மகனான நாமல் ராஜபக்ச விரைவில் கைதுசெய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோரதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்சவும் கைதுசெய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் பஷில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad