யூரோ கால்பந்து போட்டியில் செக் குடியரசு - குரோஷியா அணிகள் போட்டியிட்டனர். இரு அணிகளும் விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் தலா (2-2) இரண்டு கோல்கள் பெற்று விளையாடி வந்த நிலையில் குரோஷியா கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்துகொண்டு ரகளையில் ஈடுபட தொடங்கினார்கள். சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டதாகவும் அங்கிருந்த இருக்கைகளை பெயர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரகளையில் பட்டாசுகள் மற்றும் நெருப்புச் சுடர்களை எரியவிட்ட அவர்கள் ஒருகட்டத்தில் அவைகளை ஆட்டக்களத்திலும் வீசியுள்ளனர்.