ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் தீர்மானித்ததால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையிலும்,, சுழற்சி முறையில்,
ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவியை ஸ்லோவேகியா இன்று வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஸ்லோவேகிய தலைமை திட்டிட்டிருந்தாலும் கூட, பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்பட்டுள்ள சிக்கலுக்குத் தீர்வு காண்பதிலேயே அந்த நாட்டுக்கான 6 மாத தலைமைப் பதவிக்காலம் முடிந்துவிடும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
|