புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2016

தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த யுவதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்எண்ணை அடுப்பில் தீ
ஏற்பட்டு எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிவபாலன் பகீரதி 25வயது சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த 21.06.2016 சம்பவதினம் குறித்த யுவதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்எண்னை அடுப்பில் மண்எண்ணை குறைந்துள்ளது. எரிந்து கொண்டிருந்த அடுப்பில் மண்எண்ணை ஊற்றியபோது எதிர்பாரமல் ஏற்பட்ட தீ அடுப்பினை சுற்றி எரிந்துள்ளது இதை எதிர்பாராத யுவதி கையிலிருந்த மண்எண்ணை போத்திலினை வீசியுள்ளார். அப்போத்தலிலிருந்த மண்எண்ணை அவ்விடத்தில் சிந்தியபோது மேலும் தீ பரவி உடலில் தீ காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த யவதியின் சகோதரி உடனடியாக ஏற்பட்ட தீயனை அணைத்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் விடுதி இரண்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் நேற்று முன்தினம் திடீரென அவசரசிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோதும் சிகிச்சைப்பலனின்றி குறித்த யுவதி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணையினை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தீயினால் ஏற்பட்ட மரணம் என தெரிவித்து சடலத்தினை உறவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

ad

ad