புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2017

WelcomeWelcome கூட்டமைப்பை பதிவு செய்யாததால் புதுக்கட்சி தொடங்கினாராம்! - கதை விடுகிறார் கருணா

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம்
இன்று காலை மட்டக்களப்பு, கல்லடி, புதிய கல்முனை வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கட்சி தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யாத நிலையிலேயே தமிழர்களுக்கான புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக இங்கு உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ad

ad