புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2017

ஈபிஆர்எல்எவ்வின் எதிர்ப்பையும் மீறி கடும் கண்காணிப்புடன் காலஅவகாசம் வழங்க வவுனியா கூட்டத்தில் முடிவ

கடும் நிபந்தனையுடன் ஜெனிவா தீர்மானத்துக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனினும், பங்காளிக் கட்சியான ஈபிஆர்எல்எப் மாத்திரம் இதில் உடன்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடும் நிபந்தனையுடன் ஜெனிவா தீர்மானத்துக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனினும், பங்காளிக் கட்சியான ஈபிஆர்எல்எப் மாத்திரம் இதில் உடன்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சந்திப்பு வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணியில் இருந்து 4 மணிவரை இடம்பெற்றது. இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்றனர். வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர் மாத்திரம் சுகவீனம் காரணமாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசாரமான விவாதங்களுடன் நடந்த இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்த ஒரு கூட்டம் நடைபெற்றது.

இதில் விசேடமாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இப்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும், இலங்கை சம்மந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்ற சூழ்நிலையில் ஒரு உத்தியோகபூர்வமான வரைபு ஒன்றை சில நாடுகள் முன்வைத்திருக்கின்ற நிலைமையில் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்வதற்காக நாள் முழுவதும் நாங்கள் கருத்து பரிமாறல்கள் செய்தோம்.

இதன் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் இப்போது வாசிக்கின்றேன். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட எச்.ஆர்.சி 30 - 1 என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை வழிடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இவை கடுமையான நிபந்தனையின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த தீர்மானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக அதற்குரிய பெறுபேறுகளை ஐக்கிய நாடுகள் பேரவை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் செயலாளர் நடேசு சிவசக்தி ஆனந்தன் இந்த தீர்மானத்தோடு தங்களது கட்சி இணங்க உடன்பாடில்லை என்பதையும் தெரிவித்தார். அதையும் நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

ad

ad