நேற்று ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகையில், ஜனநாயக ரீதியில் சிந்தித்தால் இப்போதுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரை பிரதான எதிர்க்கட்சியாக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம். எ. சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் எதிர்க்கட்சி பதவியை தட்டிப்பறிக்க முடியாது. மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அணியும் தனித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தினால் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து பார்க்கலாம் என கூறினார்
|