வித்தியாவை படுகொலை செய்த பிரதான குற்றவாளிகளான மகாலிங்கம் சசிகுமார் எனும் சுவிஸ் குமார் உள்ளிட்ட மரண தண்டனை கைதிகள் ஏழு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (06) முடிவு செய்துள்ளது.
நீதிபதிகள் பிரியந்த ஜெயவர்தன, ப்ரீத்தி பத்மான் சுரசேனா, எஸ்.துரைராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று கூடியது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வித்தியா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்த 7 பேருக்கும் 2017 செப்டம்பர் 27 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.