இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் வருகைதந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தமது கோரிக்கைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்களுடன் அங்கிருந்து ஆளுநர் தொலைபேசியில் உரையாடியதாகவும், விரைவில் தங்களுடைய விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கிய ஆளுநர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தாகவும், அவரின் வாக்குறுதியை ஏற்று தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்துவதாக மேலும் தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள மூன்று கைதிகளையும் பார்க்க ஆளுநர் செல்வதாக தெரிவித்ததாக கைதிகள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |