இதில் 29 பேர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 58 படகுகளில் இருந்து 3,300 பேரை மீட்டு ஒருங்கிணைத்ததாக, இத்தாலிய கடலோர காவல்படையினர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். துனிசியா ஐரோப்பாவிற்கு செல்ல விரும்பும் புலம்பெயர்ந்தோரின் மையமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு இத்தாலியின் கரையில் இறங்கிய குறைந்தது 12,000 புலம்பெயர்ந்தோர் துனிசியாவில் இருந்து வெளியேறியதாக ஐ.நா புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 1,300 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது |