புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2023

சுவிஸில் சுதேசிகளை பீதிக்கு உள்ளாக்கி தேர்தலை வென்ற மக்கள் கட்சி

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் தேசியவாத கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் எஸ்விபி கட்சி எனப்படும் சுவிஸ் மக்கள் கட்சி அமோக வெற்றி  ஈட்டி உள்ளது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு கட்சிகள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டன எனினும் தேசியவாத கொள்கைகளை முன்னிலைப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுவிஸ் மக்கள் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

குடியேறிகளுக்கு எதிரான கொள்கைகள், சுவிட்சர்லாந்து கலாச்சாரத்தை, தனித்துவ அடையாளத்தை பாதுகாத்தல் போன்ற கொள்கைகளை முன்னிலைப்படுத்தி இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தேசியவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உலக விவகாரங்களில் கண்டுகொள்ளாத ஓர் மெத்தனப் போக்கினை இந்த அரசியல் கட்சி பின்பற்றி வருவதாக ஜெர்மனிய ஊடகம் ஒன்றை குற்றம் சுமத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து மக்களின் அச்சமூட்டு பகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு இவரை தேர்தலில் தேசியவாத கொள்கை உடைய சுவிஸ் மக்கள் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.

அடிப்படைவாத கோர முகத்தை வெளிப்படுத்துவதாக சில ஜெர்மனிய ஊடகங்கள் குற்றம் சுமத்தி சுமத்தி இருந்தன.

ஜெர்மனியின் எஃப் டி கட்சியை போலவே சுவிட்சர்லாந்திலும் எஸ்வீபி கட்சி அடிப்படை தேசியவாத கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பா முழுவதும் தற்பொழுது வியாபித்துள்ள குடியேற்றவாத கொள்கைகள் அல்லது குடியேறிகள் ஏதிலிகள் தொடர்பான உடாடல்கள் அதிகரித்துள்ளன.

குடிவேற்றவாசிகளின் பிரவேசம் சுதேசிகளை பாதிக்கும் என்ற கருத்துக்கள் ஐரோப்பா முழுவதும் தற்பொழுது பரவத் தொடங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அண்மைக்காலமாக எதிலிகள் மற்றும் குடியேறுகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்தமை எஸ்வீபி கட்சியின் வெற்றிக்கு ஓர் இந்து சக்தியாக அமைந்துள்ளது என்பது மறப்பதற்கு இல்லை.

சுவிட்சர்லாந்து உள்நாட்டு மக்களை பாதுகாப்பதாக உறுதியளித்திருந்த எஸ்வீபி கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

உக்ரைனில் இடம்பெற்று வரும் போர் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சுவிட்சர்லாந்து நடுநிலைக் கொள்கை என்ற பெயரில் உலக விவகாரங்களில் கண்களை மூடிக்கொள்ளும் ஒரு கொள்கையே பின்பற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காலநிலையை தொடர்பான பிரச்சனைகளிலும் சுவிட்சர்லாந்து உரிய பங்களிப்பினை வழங்க தவறி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுவிஸ் மக்கள் நடுநிலை என்ற கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் உலக நடப்புகளில் இருந்து விலகி நிற்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.

ஜெர்மனியில் உள்நாட்டு மக்கள் அல்லது சுதேசிகள் மத்தியில் அச்ச உணர்வை உருவாக்கி அதனூடாக அரசியல் நடத்தி கட்சி வெற்றியடைந்துள்ளது.

ஜெர்மனியில் ஏஎல்எப் போன்று சுவிட்சர்லாந்திலும் எஸ்வீபி கட்சி சுதேச கொள்கைகளை முன்னிலைப்படுத்தி வெளிநாட்டவர்கள் மூலம் அச்சுறுத்தல் ஏற்படும் என பிரச்சாரங்களை முன்னெடுத்து இந்த தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த வெற்றியே வெளிநாட்டவர்கள் தொடர்பான பீதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

சமூக ஜனநயாகக் கட்சி நடுநிலை கொள்கைகளையும் கொள்வனவு இயலுமை அதிகரிப்பு ஆகியனவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் செய்ததமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சி காலநிலை கொள்கைகளை பின்பற்றி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தது.

ad

ad