புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2023

ராஜபக்‌ஷமாரை யாராலும் அழிக்க முடியாது!

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 'கிரி அம்மாவரு' அன்னதானம் ஒன்று வழங்கப்பட்டது.
வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 'கிரி அம்மாவரு' அன்னதானம் ஒன்று வழங்கப்பட்டது. வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

அங்கு கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,

“நாட்டைக் காப்பாற்றிய தலைவனுக்குக் கடமையாகத்தான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன். இன்று இந்த நிகழ்வுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தேன். சில முகங்களையே இங்கே காணக்கிடைக்கிறது.

நாம் யாரும் தோற்கவில்லை. நீங்களும் தோற்றுப்போகவில்லை. நாமல் ராஜபக்‌ஷ இங்கு வந்துள்ளார். ஒரு மூலையில் இருக்கிறார். அப்படி இருக்க முடியாது. முன்னாள் வந்து தந்தை சென்ற பாதையில் முன்செல்ல வேண்டும். ராஜபக்‌ஷமாரை யாராலும் அழிக்க முடியாது. என குறிப்பிட்டார்.

ad

ad