யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை மன்று தள்ளுபடி செய்தது. |