குருநாகலில் கேபிள் கார் அறுந்து 7 பிக்குகள் பலி- 6 பேர் படுகாயம்! [Thursday 2025-09-25 08:00] |
![]() குருநாகல் - மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மாலை பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய பிக்குகளும், கம்போடிய பிக்கு ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 மதகுருமார்கள் பயணித்துள்ளனர். |