புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2014


யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி யோகேஸ்வரி அம்மணி செய்கின்ற வேலை இது 
23.07.2014
யாழ்.மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி அமைக்கப்படுகிறது யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் சிலைகள்... யாழ்ப்பாணத்தினை ஆண்ட மூன்று மன்னர்களின் சிலைகளை மணிக்கூட்டுக் கோபுரத்தின் மூன்று மூலைகளிலும் வைப்பதற்கு யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.. யாழ் நகரப் பகுதியில் சுற்றுலாப்பணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் யாழ்.சமூகத்துடன் கலந்துரையாடிய போது எமது வரலாற்று மன்னர்களின் சிலைகளை வைப்பதன் மூலம் வரலைாற்று உண்மைகளை யாவருக்கும் காட்ட முடியும் என்ற நோக்கத்துடன் யாழ்.மாநகர சபை யாழ்ப்பாணத்தினை ஆண்ட மூன்று மன்னர்களின் சிலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கையினை எடுத்துள்ளார். இதன்படி யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தினை சுற்றியுள்ள மூன்று வளைவுகள் தற்போது யாழ்.மாநகர சபையினால் இடிக்கப்பட்டு அவ்விடத்தில் மன்னர்களின் சிலைகள் அமைப்பதற்காக தூன்கள் அமைக்கப்பட்டு அவற்றில். மன்னர்களின் சிலைகள் அமைக்கப்படவுள்ளது. இந்தச் சிலைகள் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்தின் போது திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார் -
யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி யோகேஸ்வரி அம்மணி செய்கின்ற வேலை இது
யாழ்.மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி அமைக்கப்படுகிறது யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் சிலைகள்.

பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
23.07.2014

பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, தான் பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியிருக்கிறார் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர்  ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் காரணமாக, தனது அதிகாரத்தின் பிடியை இறுக்கமாக்கிக் கொள்வதற்காக அவர் மக்களை மௌனமாக்க முயல்கிறார் என மனித உரிமை பணியாளர்கள் மற்றும் அரச அமைச்சர் ஆகியோர் தெரிவித்துள்ளதாக அச்செய்தி மேலும்  தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட உத்தரவுக்கு இந்த அச்சமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டே தனக்கு எதிரான குரல்களை மௌனமாக்க முயல்வதாக அரச சார்பற்ற அமைப்புகளின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் வேளையில், அரசு தனது நிலை ஆட்டம் காண்பதாக உணர்கிறது, அதன் காரணமாகவே அரச சார்பற்ற அமைப்புகளுக்கு எதிரான உத்தரவு வெளியானது என ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காக யு.எஸ்.எயிட் நிறுவனம் முன்னெடுக்க இருந்த திட்டம் காரணமாக அரசு கடும் அச்சமடைந்தது.
 
ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அரசில் உள்ள சிலர் அச்சமடைந்துள்ளனர் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு ஏ.எவ்.பி செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, தான் பதவி

: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது தரப்பு இறுதிவாதம் இன்றுடன் நிறைவடைந்தது.

ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
டக்லஸ் வழக்கின் தீர்ப்பு 31 அன்று-சென்னை உயர்நீதிமன்றம் கொலை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 
யங் ஸ்டார் மற்றும் தாய்மண் கழகங்கள் பாரிஸ்  சுற்றுபோட்டிக்கு செல்லும் ஒழுங்கு முறை ,மற்றும் ஆதரவாளர்களுக்கான அழைப்பு
எதிர்வரும் சனியன்று இங்கிருந்து பேரூந்தில் புறப்பட்டு திங்கள்  காலை  திரும்ப வந்து சேருவோம்  .யங் ஸ்டார் கழகத்தோடு இணைந்து றோயல் வீரர்களும் தாய்மண் கழகத்தோடு  தமிழ் யுத், வானவில் வீரர்களும் விளையாடுவார்கள் .யங் ஸ்டார் தாய்மண் கழகங்கள் பங்கு பற்றவுள்ளன.இன்னும் 26 இருக்கைகள்  இருப்பதால் பதிவு செய்து கொள்ளுங்கள் முரளி அல்லது மதி (தமிழர் இல்லம் )
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 200 கடைகள் இடிப்பு


 சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருந்த சாலையோர கடைகளை

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய
 போதிய ஆதாரங்கள் உள்ளது : அட்டர்னி ஜெனரல்
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி மாறன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய


வைரமுத்துவுக்கு அறுவை சிகிச்சை
 


கவிஞர் வைரமுத்து முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.  இந்நிலையில் அவர் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கடந்த ஒருவாரமாக
யாழ் நகரில் மற்றும் 'மாறு தடம்' மாபெரும் வெளியீட்டு விழா... 25.07.2014 வெள்ளிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ். ராஜா திரையரங்கில்...
ஈழத்துக்கலைஞர்களும் சுவிஸ்கலைஞர்களும் இணைந்த பிரமாண்ட தயாரிப்பு. நீண்டகால இடைவெளிக்குப்பின்
யாழ்நகரில் வெளியாகும் நம்மவரின் முழுநீள திரைப்படம் (150 நிமிடங்கள் )
இது உங்களின் கதை உறவுகளே! காணத்தவறாதீர்கள்.
யாழ். ராஜா திரையரங்கம்
தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி

மன்னார் அஜன் திரையரங்கம்
தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி
ஈழத்தமிழனே எழுந்து வா 
சுவிஸ் பெர்னில் இன்று கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு 
23 ஜூலை புதனன்று மாலை 15.00 மணி முதல் 15.00 வரை 
Helvetiaplatz 4 .Bern (Autobahnத Thun Interlaken எடுத்து Ostring பேரன் வெளியேறி Bern Zentrum நோக்கி வர 7 நிமிட ஓட்டம் )
தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு; நெல்லியடியில் சம்பவம் 
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
அரசையும் இராணுவத்தினரையும் விசாரிக்க அனுமதி கோரியுள்ளோம்; ஜனாதிபதி நியமித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கருத்து 
இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்த ஐ.நா. நிபுணர்
மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் : யாழில் கையெழுத்து வேட்டை 
news
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
 
இதன் போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழ் ,முஸ்லிம் , சிங்கள பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்து இனவாதத்திற்கும், மதவாதத்திற்குமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டம் 
 பயங்கரவாத நடவடிக்கைகளினால் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெறும் வகையில் புதிய சட்ட மூலமொன்று
சர்வதேச மயமாக்காது பிரச்சினைக்குத் தீர்வு; ஆலோசனை கூறுகின்றது இந்திய அரசு 
இலங்கை அரசுக்கும், தமிழர்களுக்குமான பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதனை சர்வதேச மயப்படுத்தப்படுவதற்குப்
news
அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ்த் தின நாடகப்போட்டியில் சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.


மர்மமுடிச்சு  எனும் இந்த நாடகத்தை நாடகமும்
காணிகளை மீட்டுத் தருமாறு உரிமையாளர்கள் முறைப்பாடு; நேற்று மனித உரிமை ஆணைக்குழுவில் பதிந்தனர் 
கீரிமலையில், உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியேயுள்ள தமது சொந்தக் காணிகளை துப்புரவு செய்ய முயன்ற
குழந்தை பெற்று 20 நாட்கள்தான்… 12 பேரால் பலாத்காரம்
உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்று 20 நாட்களே ஆன பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

பாடலாசிரியர் வைரமுத்து உடல்நிலை சரியில்லாமல் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்

கொழும்பிலேயே அதிகளவில் ஏழைகள் இருக்கின்றார்கள்: அமைச்சர் தினேஷ் குணவர்தன

இலங்கையில் கொழும்பின் வடக்கு தொகுதியிலேயே உயர்கல்வியை பெற முடியாத பிள்ளைகள் அதிகளவில் இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கும் பிரதியமைச்சர்

பாலியல் வல்லுறவுச் சம்பவம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கனிய

தடுத்து வைக்கப்பட்ட இலங்கை அகதிகளை அணுக இந்தியா கோரிக்கை
அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது

மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய ஒளியைப் பார்க்கும் தஞ்சக் கோரிக்கையாளர்கள
நடுக்கடலில் அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்

சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசின் ஊதுகுழல் -சம்பந்தன் 

பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசாங்கத்தை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ad

ad