புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2018

சுதந்திரக்கட்சியை சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைய தயார் ரணில் மீண்டும் பிரதமராகின்றார்?

இன்று ஜக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் எனவும் எதிர்வரும் திங்கட் கிழமை அவரது அமைச்சரவை பதவி ஏற்குமென பிந்திக்கிடைத்த கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி நேற்றைய கூட்டத்தில் குறிப்பிடவில்லை என ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளவர் ஆட்சி அமைக்க ஜனாதிபதி அனுமதிக்கவுள்ளதாகவும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி என்ற ரீதியிலேயே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியதாகவும் தெரியவருகின்றது.

இதனிடையே சுதந்திரக்கட்சியை சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைய தயார் என அறிவித்துள்ளனர். ஆனால் தங்களது கட்சியுடன் இணைந்தாலே தவிர சுதந்திர கட்சியாக யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோன்று விஜயதாச ராஜபக்ச ஐ.தே. முன்னணியில் இணைந்தால் அவருக்கு அமைச்சுப்பதவி வழங்கக்கூடாது என கட்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (14) ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்று திங்கட்கிழமை அமைச்சரவை பதவி ஏற்குமெனவும் அத்துடன் 17’ம் திகதி காலிமுகத்திடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றிக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ad

ad