100 பேரை கொன்று குவித்த ரவுடி சுட்டுக்கொலை
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த ஜோகிந்தர் மற்றும் டிரைவர் சந்தீப் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜோகிந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டிரைவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை வழக்குகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி ஜோகிந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். பின்னர் கடந்த மாதம் 16-ம்தேதி ஜாமீனில் வெளியே வந்து, விசாரணைக்கு ஆஜராகி வந்தான். இதனை நோட்டமிட்ட எதிரிகள் இன்று தனியாக சென்றபோது தீர்த்து கட்டியுள்ளனர்.