புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012


மு.க.அழகிரி இப்போதுதான் இயல் புக்குத் திரும்பி இருக்கிறார். மகனுக்கு முன்ஜாமீன் கிடைத்து விட்ட சந்தோஷம், அவரைப் பழைய அதே அழகிரி யாகவே மாற்றிவிட்டது!
 'நீங்க கட்டுன வீட்டில் வாழ்றேன், நீங்க வாங்கிக் கொடுத்த காரை யூஸ் பண்றேன். நீங்க அனுபவித்த சிறை வாழ்க்கையையும் நான் அனுபவித்துப் பார்க்க வேண்டாமா?’ - கிரானைட் வழக்கில் தன் மகனுக்கு எப்படியாவது முன் ஜாமீன் கிடைத்துவிடாதா என
மு.க.அழகிரி தவித்துக்கொண்டு இருந்த நேரத்தில், இப்படி கூலாகச் சொன்னாராம் மகன் துரை தயாநிதி.
'என்னால் உங்க எல்லோருக்கும் டார்ச்சர். தாத்தா சொல்​றாப்ல, நான் சரண்டர் ஆகிடுறேன்; அப்புறம் ஜாமீன் எடுத்துக்கலாம்’ என்று மகன் சொன்ன போதும், 'அப்படி எல்லாம் அவசரப்படக் கூடாது. ஒரு வழக்கில் சரண்டர் ஆனால், பி.ஆர்.பி-க்கு போட்டதுபோல் அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு மாசக்கணக்கில் உள்ளே வச்சிருவாங்க. உன்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நாங்க நிம்மதியா இருக்க முடியுமா? அந்தத் தைரியம் எனக்கு இல்லப்பா’ என்று பாசத் தந்தையாய் தழுதழுத்தாராம் அழகிரி. அதனால் சரண்டர் முடிவைக் கைவிட்டு, மும்பை, கோவா, மாலத்தீவு எனத் தாவிக்கொண்டே இருந்தாராம் துரை தயாநிதி. இவர்களுக்கான தேவைகளை கச்சிதமாய் செய்துகொடுத்ததில் முன் னாள் துணை மேயர் மன்னனுக்குப் பெரும் பங்கு உண்டு என்கிறார்கள்.
டிசம்பர் 10-ம் தேதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நான்காவது வழக்காக வந்தது துரை தயாநிதி உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுக்கள். எப்படியும் முன்ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், 8-ம் தேதியே மதுரைக்குள் வந்துவிட்டாராம் துரை. வீட்டுக்கு வராமல் வேறு இடத்தில் இருந்த அவரோடு, மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதியும் இருந்ததாகச் சொல்கிறார்கள். முன்ஜாமீன் கிடைத்த செய்தி கிடைத்ததுமே உற்சாகமான அழகிரி, 'எனக்குத் துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அவர்களை இயற்கை பார்த்துக்கொள்ளும்’ என்று, மிசா பாண்டியன் மகன் திருமணத்தில் முழங்கினார்.
முன்ஜாமீன் பெற்ற துரை தயாநிதிக்கு வாழ்த்துச் சொல்வதற்காக வீட்டில் வரிசைகட்டியது அழகிரியின் விசுவாச வட்டாரம். அனைவரிடமும் சால்வைகளை வாங்கிக்கொண்டார் துரை. அழகிரியும் மகனுக்குப் பக்கத்தில் இருந்தார். 10-ம் தேதியே முன்ஜாமீன் கிடைத்துவிட்டாலும் மறுநாள், நீதிபதி சி.டி.செல்வம் விடுப்பில் சென்று விட்டதால் 12-ம் தேதிதான் நீதிமன்ற உத்தரவு நகல் கைக்கு வந்ததாம். 72 பக்கங்கள் கொண்ட அந்த நகலை அன்று மாலையே அழகிரியிடம் சேர்த்தனர் வக்கீல்கள். அன்று இரவே தாத்தாவைச் சந்திக்கக் கிளம்பினார் துரை. பேரனை உச்சிமுகர்ந்து ஆசீர்வதித்த கருணாநிதி, 'கோர்ட்டுக்குப் போறப்ப கூட்டம் கூட்டுறது, கோஷம் போடுறது எல்லாம் வேணாம். எவனாச்சும் ரகளை பண்ணிட்டுப் போனா, அதுக்கும் அழகிரிதான் காரணம்னு கேஸ் போடுவாங்க’ என்று அன்புப் பேரனுக்கு எச்சரிக்கை கொடுத்தாராம்.
  போயஸ் கார்டன் வீட்டில் தனது மாமனார் சீத்தாராமனையும் சந்தித்து, தன்னால் ஏற்பட்ட விசாரணைத் தொந்தரவுக்கு மன்னிப்புக் கேட்டாராம் துரை. 'அழகிரிக்கு சம்பந்தி ஆகப்போகிறோம் என்று முடிவெடுத்தபோதே இதெல்லாம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்ததுதான். இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’ என்று மருமகனை உற்சாகப்படுத்தி அனுப்பினாராம் சீத்தாராமன். 13-ம் தேதி மாலை மதுரையில் இருந்தார் துரை. ''காலையில் கோர்ட்டுக்குக் கிளம்பணும்பா, தேவை​யில்லாம கூட்டத்தைக் கூட்டாதீங்க'' என்று கட்சிக் காரர்களுக்கு அன்புக்கட்டளை போட்டார் அழகிரி.
அப்படியே காலை 9.30 மணிக்கு, ஃபார்ச்சூனர் காரில் துரை தயாநிதியும் அவருக்கு முன்னதாக ரேஞ்ச் ரோவர் காரில் அழகிரியும் மேலூர் நோக்கிக் கிளம்ப, சுமார் 20-க்கும் மேற்பட்ட கார்கள் பின்​தொடர்ந்தன. வழியிலும் சிலர் கலந்துகொண்டதால் கோர்ட் எல்லையைத் தொட்டபோது, கார்​களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியது. மகனையும் மற்றவர்களையும் கோர்ட்டுக்குப் போகச்சொல்லிவிட்டு அருகில் இருந்த எம்.பி. அலுவலகத்தில் அமர்ந்தார் அழகிரி.
10.30 மணிக்கு, துரை தயாநிதியின் பாஸ்போர்ட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட, 'கொஞ்ச நேரம் வெளியில் இருங்கள்’ என்று சொன்னார் மாஜிஸ் திரேட். மீண்டும் ஃபார்ச்சூனருக்கு வந்த துரை தயாநிதி, அடுத்த அழைப்புக்காகக் காத்திருந்தார். முன்பு, துரையின் இருப்பிடத்தைக் கேட்டு போலீஸார் துருவியபோது, 'அவர் எங்களோடு தொடர்பில் இல்லை; எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று சாதித்த துரையின் கிரிக்கெட் டீம் நண்பர்கள் அல்வா கடை மனோஜ், ராம கிருஷ்ணன், குட்டி, மருதுபாண்டியன் ஆகியோர் துரையின் காருக்குள் இருந்தனர்.
'நீதிமன்ற வளாகத்தில் யாரும் கோஷம் போடக் கூடாது, ரகளைகளில் ஈடுபடக்கூடாது’ என்று அழகிரி கண்டிப்பாகச் சொல்லி இருந்ததால், அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அலேக்காகத் தூக்குவதற்காக மிசா பாண்டியன் தலைமையில் ஒரு டீம்  வளாகத்தை வட்டமடித்துக்கொண்டே இருந்தது. கவுன்சிலர் அருண்குமார், தொண்டர் அணி சரவணன், முபாரக் மந்திரி உள்ளிட்டோர் துரை யின் காருக்கு அருகில் நின்றனர். கண்ணாடியை இறக்கிவிட்டபடி துரையும் அவர்களோடு கலாய்த்துக்கொண்டு இருந்தார்.
கோர்ட்டுக்கு வரும்போது புதிதாக ஒரு வழக்கைப்போட்டு துரையைத் தூக்கக்கூடும் என்று ஒரு தகவல் இருந்தது. இதை டெஸ்ட் பண்ணிப் பார்ப்பதற்காகவே துரையின் பார்ட்னரான நாகராஜை ஒரு நாள் முன்னதாக கோர்ட்டில் சரண் அடைய வைத்து ஆழம் பார்த்து இருக்கிறார்கள். அவருக்கு எந்தப் பிரச் னையும் இல்லை என்றதும்தான், மறுநாள் துரையை அழைத்து வந்தார்களாம்.
காருக்குள் இருந்தபோது துரை தயாநிதியிடம் பேசினோம். ''இது பொய்யாகத் திணிக்கப்பட்ட வழக்கு. நீதிமன்ற உத்தரவுப்படி சரண் அடைய வந்திருக்கிறேன். மற்ற சட்ட நடவடிக்கைகளை எங் களது வழக்கறிஞர்கள் பார்த்துக்கொள்வார்கள். நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை கோர்ட்டில் நிரூபிப்போம். இதற்கு மேல் பேசுவது இப்போதைக்கு சரியாக இருக்காது'' என்று சொல்லிவிட்டு கார் கண்ணாடியை ஏற்றிக்கொண்டார்.
கிட்டத்தட்ட ஒண்ணே கால் மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, கோர்ட்டில் இருந்து அழைப்பு வர, அடுத்தக் கட்ட சம்பிரதாயங்களை நிமிடங்களில் முடித்துக்கொண்டுக் கிளம்பினார் துரை தயாநிதி. 15-ம் தேதி காலை சுமார் 20 கார்கள் பின்தொடர கீழவளவு ஸ்டேஷனில் ஆஜரானார் துரை. தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்துப்போட வேண்டும் என்பதுதான் கோர்ட் நிபந்தனை என்பதால், 10.30 மணி வரை காக்க வைத்தது போலீஸ். காத்திருந்து, சரியான நேரத்துக்குக் கையெழுத்தைப் பதித்து விட்டுக் கிளம்பினார் துரை.
மதுரை - கீழவளவு சாலையில் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு காலை நேரப் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது!

ad

ad