புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2013


இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான சில புகைப்படங்களை வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு வழங்கியமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் மடிக்கணனிக்கு தனது மடிக்கணனியிலிருந்த பல
புகைப்படங்களை உள்ளீர்ப்புச் செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னடுக்கப்படுவதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு  இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான பல புகைப்படங்களை வழங்கியவர் வவுனியாவில் இயங்கும் வெளிநாடொன்றைச் சேர்ந்த அமைப்பின் முக்கியஸ்தர் என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வருவதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

ad

ad