புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2014




தி.மு.க.வை வலிமைப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைப்பது குறித்தும் ஆராய்ந்து 15-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க, கல்யாணசுந்தரம், ராஜமாணிக்கம், திருவேங்கடம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, சச்சிதானந்தம் ஆகிய 6 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தார் கலைஞர். இந்த கமிட்டி, தங்களது ரிப்போர்ட்டை கலைஞரிடம் 14-ந்தேதியே (சனிக்கிழமை) சமர்ப்பித்தது. இதனை யடுத்து பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சொன்னது போல் தி.மு.க. மாவட்ட கழகங்களை 65 ஆக பிரித்துள்ளார் கலைஞர்.

கமிட்டியின் பரிந்துரைகள் 

120 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கலைஞரிடம் தாக்கல் செய்திருக்கிறது குழு. இதில், ஒரு மா.செ.வின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதால் இரண்டு முறைக்கு மேல் ஒருவருக்கு வாய்ப்பு தரக்கூடாது, அதேசமயம், கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன் படுத்தி சிறப்பாக செயல்படும் மா.செ.க்களுக்கு மட்டும் விதிவிலக்காக மேலும் ஒருமுறை வாய்ப்பு வழங்கலாம்,  அதிகபட்சமான குற்றச்சாட்டுக்கு தற்போது ஆளாகியுள்ள 15-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை அப்பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும், மாவட்டத்தில் கல்யாணம் தொடங்கி காதுகுத்து வரை நடக்கும் விழாக்களுக்கு மக்கள் முகம் சுளிக்கும் வகையில் பிரமாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கும் செயல்களுக்கு தடை போடவேண்டும், அந்த விழாக் களுக்கு மாவட்ட  செயலாளர்களும் அவரது மகன், மச்சான், உறவினர்களும் பிரமாண்டமான போஸ்களில் நடந்து வருவது போன்ற ஆடம்பர பேனர்களும் தவிர்க்கப்படவேண்டும், தற்போது கட்சியின் அடித்தளமான கிளைக்கழகத் தேர்தல் நடந்து முடிந் திருப்பதால் அதன் நிர்வாகிகளைக்கொண்டு ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடத்தப்படக்கூடாது, தற்போதைய மாவட்ட செயலாளர்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் என்பதால் அந்த கிளைக்கழகங்கள் முழுமை யாக கலைக்கப்பட வேண்டும், கிளைக்கழகங்களை ஒழுங்குபடுத்து வது அவசியம், தேர்தலுக்காக அமைக்கப்படும் பூத் கமிட்டிகள் தேர்த லுக்குப் பிறகு கலைக்கப்பட்டுவிடுகிறது. அதை அப்படி செய்யாமல் பூத் கமிட்டிக்கு நிர்வாக ரீதியிலான அங்கீகாரம் தரலாம், ஒரு கிளைக்கழகத் தின் கீழ் 10-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் வருவதால் அந்த கமிட்டி யின் நிர்வாகிகளை வைத்து கிளைக்கழக செயலாளர்களை தேர்வு செய்யலாம், வாரிசுகளுக்கு பதவிகள் தருவது தடுக்கப்படவேண் டும், கட்சிக்கு துரோக மிழைத்தவர்கள் தண்டிக் கப்பட வேண்டும். சமூக ரீதி யாக பதவிகள் தரப்பட வேண்டும் என்பது உள்பட 13 பரிந்துரைகளை தந்திருக்கிறது கமிட்டி. இதில் எதை எதை நடை முறைப்படுத்துவது என்பதை கலைஞர் தீர்மானிப்பார்.

மாவட்டப் பிரிவினை

மாவட்ட எல்லைகளை 72-ஆக பிரித்து ரிப் போர்ட் தந்துள்ளது கமிட்டி. தலா இரண்டு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட எல்லைகளில் எவ்வித மாறுதலும் செய்யப் படவில்லை. இவைகள் தவிர்த்து குறைந்தபட்சம் 3 சட்டமன்ற தொகுதிகளும் அதிகபட்சம் 6 சட்டமன்றத் தொகுதிகளும் அமையும் வகையில்  மாவட்ட எல்லை களைப் பிரித்துள்ளனர். மாநகராட்சிகளைப் பொறுத்த வரை மாநகராட்சியின் டிவிஷன்களை மையப்படுத்தியும் பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லையில் 22 சட்டமன்ற தொகுதிகளும் இவைகளுக்கு உட்பட்டு 200 டிவிஷன் களும் இருக்கிறது. அதாவது, காஞ்சி மாவட்டத்தில் அடங்கியுள்ள சோழிங்கநல்லூர், ஆலந்தூர் திருவள் ளூர் மாவட்டத்தில் அடங்கிய மாதவரம், திருவொற்றி யூர், மதுரவாயலும் சென்னை மாநகர எல்லைக்குள் வருகிறது. அதனால் 22 தொகுதிகள். இதில் 5, 5, 5, 5 என  தொகுதிகளாக பிரித்தாலும் மீதம் 2 தொகுதி தொக்கி நிற்கிறது. அதனால் 50, 50, 50, 50 டிவி ஷன்களாக 4 மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சாம்பி ளுக்கு முதல் 50 டிவிஷன்களை எடுத்துக்கொண்டால் மாதவரம், திருவொற்றியூர், ஆர்கே நகர், பெரம்பூர், ராய புரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகின்றன. மற்ற டிவிஷன்களுக்கும் இப்படியே. கோவையில் மொத்தம் 10 தொகுதிகள். இதில் கோவை புறநகரில் 2 மாவட்டங்களும் கோவை மாநகரில் 2 மாவட்டங்களும் என 4 மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புறநகரில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர் ஆகிய 4 தொகுதிகளை இணைத்து ஒரு மாவட்ட மாகவும், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய 3 தொகுதிகளை இணைத்து மற்றொரு மாவட்டமாக வும் கோவை மாநகரில் 100 டிவிஷன்கள் இருப்ப தால் அதை 50, 50 என இரண்டாக உடைத்து 2 மாவட்டங்களையும் உரு வாக்கியுள்ளனர். அதே போல,  திருப்பூர் மாவட் டத்தில் 8 தொகுதிகள். இதனை திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவி னாசி, பல்லடம் ஒரு மாவட்டமாகவும், தாராபுரம், காங்கே யம், மடத்துக்குளம், உடுமலைப் பேட்டை ஆகியவை ஒரு மாவட்டமாக வும் பிரிக்கின்றனர்.  ஈரோட்டில் 8 தொகுதிகள். இதனை ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந் துறை ஒரு மாவட்டமாகவும் பவானி, பவானிசாகர், கோபி, அந்தியூர் மற் றொரு மாவட்டமாகவும் பிரிக்கின்றனர். 

11 தொகுதிகள் கொண்ட விழுப் புரத்தில் 3 மாவட்டங்கள் உருவாகிறது. செஞ்சி, திண்டிவனம், மயிலம் ஆகிய 3 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், கள் ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய 4 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவி லூர், வானூர் ஆகிய 4 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும் என 3 மாவட்டங்கள். கடலூரில் உள்ள 9 தொகுதிகளில் திட் டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, சிதம் பரம், காட்டு மன்னார்கோவில் ஆகிய 5 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும் பிரிந்துள்ளது. கன் னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகள். இவைகளை விளவங்கோடு, பத்மநாப புரம், கிள்ளியூர் ஒரு மாவட்டமாகவும், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகள் மற்றொரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.  6 தொகுதிகள் கொண்ட தூத்துக்குடியை  கோவில்பட்டி, ஒட்டபிடாரம், விளாத்திக்குளம் தொகுதி களை இணைத்தும்,  திருச்செந்தூர், தூத் துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளை இணைத்தும் 2 மாவட்டங்களை உரு வாக்குகின்றனர்.  இப்படித்தான் அனைத்து மாவட்டங்களிலும் அடங்கிய  அரு கருகே உள்ள சட்டமன்ற தொகுதிகளை சேர்த்து புதிய மாவட்டங்கள் உருவாக் கப்பட்டுள்ளது. 72 மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, ""72 என்பது அதிகமாக இருக்கிறது. இந்த எண்ணிக்கையை  சற்று குறைக்க வேண்டும்'' என்று சொல்லி வந்த கலைஞர் 65 மாவட்டங்களாக குறைத் திருக்கிறார்.

மா.செ.க்களின் கோபம்

கலைஞரிடம் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதை அடுத்து  விடிய விடிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள் மா.செ.க்கள் பலரும். ஈரோடு என்.கே.கே.பி. ராஜா, ""இது என் மாவட்டம். இங்கு நான் ஒரு மாவட்ட செய லாளர். இன்னொருத்தர் நான் சுட்டிக்காட்டும் நபர்தான் இருக்க முடியும். இதைத்தாண்டி வேறு யாரும் உள்ளே வந்துவிட அனுமதிக்க மாட்டேன்'' என சீறிக்கொண்டிருக்கிறார். திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மூக்கையா, மூர்த்தி ஆகியோர் ராத்திரி முழுக்க விவாதித்து ""இந்த அறிக்கையை ஏற்கக்கூடாது. ஸ்டாலினிடம் அழுத்தமாக சொல்லணும். இந்த அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டால் நமக்கு மரியாதை இல்லை'' என்று குமுறியிருக்கிறார்கள். அதே போல, மதுரை கோ.தளபதி- கே.கே.எஸ்.எஸ்.ஆரும் தனியாக ஆலோசித் திருக்கிறார்கள். தூத்துக் குடி பெரியசாமியோ, ""கலைஞர் மண்டபம் கட்டி யவன் நான். என்னிடமிருந்து பதவியை பறிப்பார்களா?'' என்று  மகன், மகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி பதவி பறிபோகும் மா.செ.க்கள் பலரும் ஆலோசனை நடத்திக்கொண்டிருக் கிறார்கள். 

ஆலோசனையில்,  ""1967-ல் காங் கிரஸ் தோத்தது. அவன் ஜெயிச்சா மந்திரியாயிடுவான், இவன் ஜெயிச்சா மந்திரியாயிடுவான்னு திட்டமிட்டு, ஒவ்வொருத்தரும் குழி பறிச் சாங்க. அதனாலதான் காங்கிரஸ் தோத்தது. அதேபோல, இப்போ 3, 3 தொகுதிகளாக பிரிச்சி சின்ன சின்ன மாவட்டமா புதுசா உருவாக்குனா அவன் இவனையும், இவன் அவனையும் தோக்கடிப்பானுங்களே. அப்போ, எப்படி ஆட்சியை பிடிப்பீங்க? புதுசா போடுற மா.செ.க்கள் ஆளும் கட்சிக்கு விலை போக மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அதனால், அதிகமான மாவட்டங்களை உருவாக்குவதற்கு பதிலா, ஒவ்வொரு மாவட்டத்தையும் ரெண்டா உடைத்திருக்கலாம் அல்லது அ.தி.மு.க.வுல இருப்பது போல மாத்தியிருக்கலாம்'' என்று காட்டமாக ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக் கொள்கிற மா.செ.க்கள், ""இதையெல்லாம் நாம் பொதுக்குழு, செயற்குழுவில் பேசணும்'' என்று கோபம் காட்டி வருகிறார்கள். 

ஒதுக்கிவிட வேண்டியதுதான்

மா.செ.க்கள் பேசிக்கொள்வதை அறிந்துள்ள கலைஞரோ, ""பேசட்டும், பேசட்டும். யார்- யாரெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நினைக்கி றார்களோ, அவங்களையெல்லாம் ஒதுக்கிட வேண்டியதுதான்'' என்றவர் மாற்றப்பட்ட மாவட்ட எல்லைகளை உடனடியாக அறிவிக்க சொல்லி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

""மாநகராட்சி பகுதிகளில் சட்டமன்றத் தொகுதிகள் மிக மிக அருகில் இருப்ப தாலும், அதன் எல்லை கள் சிறியதாகவும் இருப்ப தாலும், குழு பரிந்துரைத்த 72 எண்ணிக்கையை 65 ஆக குறைத்திருக்கிறார் கலைஞர்'' என்கிறார்கள்.

இந்த மாவட்ட பிரி வினைக் குறித்து, ""பரந்து விரிந்த மாவட்ட அதிகாரத் தை 20, 30 வருடங்களாக வைத்திருந்த மா.செ.க்களின் அதி காரம் பறிக்கப்பட்டு அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதில் 90 சதவீத தொண்டர்களுக்கு மகிழ்ச்சிதான். அதனை எங்களோடு பகிர்ந்து கொண் டிருக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்'' என்கின்றனர் குழு உறுப்பினர்களுக்கு நெருக்கமான தி.மு.க. வி.ஐ.பி.க்கள்.

ஸ்டாலின் மூவ்

சீனியர் மா.செ.க்களின் குமுறல்களை  அறிந்த ஸ்டாலினோ, அவர்களின் அப்-செட்டை போக்கும் வகையில், கட்சி அமைப்பில் 1996-ல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டபோது, சீனியர் மா.செ.க்களை யெல்லாம் மண்டல செயலாளராக நியமித்தது போல, தற்போது மண்டல அமைப்பாளராக சீனியர்களை நியமித்துவிடலாம் என மூவ் பண்ணி வருகிறார். இப்படி நடந்தால், "முன்னைவிட கூடுதல் அதிகாரம் கொடுத்தது போலாகிவிடும்' என்கிற தகவல் தலைமைக்கு சொல்லப் பட்டதால்...  இந்த விவகாரம் ஆலோசனை அளவிலே நிற்கிறது.

ad

ad