பிரான்சில் மீண்டும் துப்பாகிச் சூடு: பொலிஸார் ஒருவருக்கு காயம்
பிரான்சில் பத்திரிகை அலுவலகம் ஒன்றின் மீது நேற்று காலை உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு, ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 12 பேர் பலியானார்கள், 10 பேர் காயம் அடைந்தனர், இதனையடுத்து பாரிஸ் நகர் முழுதும் உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது.
இத்தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று சரணடைந்த இளைஞனிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் பாரீஸ் நகர் அருகே உள்ள மாண்ட்ரோக் நகரத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில் பொலிசார் ஒருவர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.