புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2015

கூட்டமைப்பின் முடிபில் எந்த மாற்றமும் இல்லை மாவை சேனாதிராஜா அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற் கெனவே விடுத்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் போலியான துண்டுப் பிரசுரங்கள் அச்சாகி, மக்கள் மத்தியில் விநியோகி க்கப்படவுள்ளதாக அறிய வந்துள்ளது.

எனவே போலியான துண்டுப் பிரசுரங்கள் பற்றி கவனஞ்செலுத்த வேண்டாம் எனவும்,
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் ஏற்கெனவே விடுத்த வேண்டுகோளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அறிவித்து ள்ளார்.                  

ad

ad