புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

2வது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால்



2013 டிசம்பர் 4ல் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28, பாஜக 31, காங்கிரஸ் 8, சுயேட்சை 1, ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், சிரோன்மணி அகாளி தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. 

15 ஆண்டுகள் காங்கிரஸ் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார் கெஜ்ரிவால். காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் டிசம்பர் 26ல் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார். 49 நாள் ஆட்சி நடத்திய கெஜ்ரிவால் சட்டசபையில் லோக்பால் மசோதவை கொண்டு வந்தார். ஆனால் இதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காததால், முதல்வர் பதவியை 2014 பிப்ரவரி 14ம் தேதி ராஜினாமா செய்தார். பின்னர் இங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2015 பிப்ரவரி 7ல் மீண்டும் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து 2வது முறையாக கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ad

ad