போலி ஒப்பந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலனை விசாரிக்க அவரது மகள் துல்மினி அத்தநாயக்க நேற்று சிறைசாலைக்கு சென்றுள்ளார்.
தன் தந்தைக்கான பகல் உணவுடன் சென்ற துல்மினி ஊடகத்திடம் தன் தந்தை நலமாக உள்ளதாகவும் வெகு விரைவில் பிணை கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
துல்மினி அத்தநாயக்க பிரித்தானியா நிவ் காசல் பல்கலைகழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடதக்கது.