புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

ஆம் ஆத்மி வரலாறு காணாத வெற்றி மூன்றில் மட்டுமே தோல்வி

 டெல்லியில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 10.02.2015 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் 67 தொகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. முதல் அமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 3 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

மிகப் பெரிய வெற்றியை டெல்லி மக்கள் கொடுத்துள்ளனர். மக்களுடன் இணைந்து டெல்லியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ad

ad