சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு என்பது சிறைக் கைதிகளின் நன்னடத்தையின் அடிப்படையில் எடுக்கக் கூடிய முடிவு என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு இன்று தனது வாதத்தைத் தொடக்கியுள்ளது.
அதில், தண்டனைக் குறைப்பு என்பது சிறைக் கைதிகளின் நன்னடத்தையைப் பொறுத்து எடுக்கக் கூடிய முடிவு. இதில், விசாரணை அமைப்பு, வழக்கின் முக்கியத்துவத்தை கருதி முடிவு எடுக்கப்படுவதில்லை.
தண்டனைக் குறைப்புக்கு, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது மாநில அரசின் அதிகாரத்தை நசுக்குவதாகும்.
சட்டப்பேரவையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக தீர்மானத்தை முன்மொழியும் போது அதனை நிறைவேற்றுவது அரசின் கடமையாகும் என்றும் தமிழக அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளார்.