புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2015

யாழில் பதிவுகளை மேற்கொண்ட காணாமல் போனோர் சங்கத் தலைவிக்கு எதிராக போராட்டம்


யாழில் காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகள் இன்று  முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
 
காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை யாழ். கிறீன் ரெஸ்ட் விடுதியில் காணாமல் போனோர் சங்கத் தலைவி   ஸ்ரீகாந்தியால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
 
இதன்போது பதிவுகளை மேற்கொள்வதற்காக காணாமல் போனவர்களின் பெற்றோர், உறவினர்கள் பல மாவட்டங்களில் இருந்து  வருகைத் தந்திருந்தனர்.
 
ஆனால் அங்கு பதிவுகளை முன்னெடுத்து வந்த காணாமல் போனோர் சங்கத் தலைவி ஸ்ரீகாந்தி  பரீட்சயமற்றவராகவே காணப்பட்டதால், மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது. அத்துடன் அங்கிருந்த நபர் அவரை ஒளிப்படம் எடுத்துள்ளார்.
 
அதனையடுத்து கோபமடைந்த குறித்த சங்கத்தலைவி தன்னை ஒளிப்படம் எடுத்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க தலைவர் சகாதேவனை தாக்கியுள்ளார். 
 
அத்துடன், இன்னும் சற்றுநேரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாவட்ட பொது வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனின் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அது முடிந்து அனைவரும் மதிய போசனம் அருந்தி செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
 
அவரது இந்த பேச்சால் ஆத்திரமடைந்த காணாமல் போனோரின் உறவுகள், குறித்த பெண்ணிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி கோமெழுப்பியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியது.
 
குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற யாழ்ப்பாணப் பொலிஸார் குறித்த இடத்தில் பதற்ற நிலையை குறைக்கும் நிலையில் அனைவரையும் கைது செய்தனர்.
 
இதேவேளை இந்த பதிவுகள் மேற்கொள்ளும் செயற்பாட்டிற்கும் யாழ்.மாவட்ட வேட்பாளர் அங்கஜனுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.
 
பின்னர் குறித்த பிரச்சினை தொடர்பில் யாழ்.மாவட்ட நிலைய பொறுப்பதிகாரி வூட்லருக்கு தெரியவந்ததனை அடுத்து குறித்த மக்களிடம் சென்று கருத்து தெரிவிக்கையில்,
 
குறித்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட காணாமல் போனோர் சங்கத் தலைவி சிறிகாந்தி மற்றும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க தலைவர் சகாதேவன் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் வூட்லர் மேலும் தெரிவித்தார்.
-

ad

ad