சந்தேக நபா்கள் சட்டத்தரணி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
அருட்தந்தை ஒருவர் உற்பட 10 பேர் இவ்வாறு சட்டத்தரணி ஊடாக மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமா கி இருந்தனர்.
இவர்களில் மூன்று பெண்களும்,ஆறு ஆண்களும் அடங்குகின்றனர். குறித்த 10 பேரிடமும் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட மன்னார் காவல்துறையினர் பின்னர் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்;. இதன் போது விசாரனைகளை மேற் கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அருட்தந்தையினை சொந்தப் பிணையிலும், ஏனைய 9 பேரையும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதித்ததுடன் இம்மாதம்; 29 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.