சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு 2018 ஜனவரியில் இடமாற்றம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அதிருப்தி காரணமாக பதவிகாலம் முடிவடைவதற்கு முன்னரே இராணுவ சேவையிலிருந்து கேர்ணல் ரத்னபிரிய பந்து ஓய்வுபெற்றுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலில் அதுவும் வடக்கு அரசியல் களத்தில் குதிப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.