இங்கிலாந்தில் அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளையும் கோடைகாலத்திற்கு முன்பு திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து குழந்தைகளும் செப்டம்பர் மாதத்திற்குள் வகுப்பிற்கு வருவார்கள் என்று எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் இரண்டு மீட்டர் விதி கைவிடப்படாவிட்டால் அது சாத்தியமில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்து வருகிறார்கள்.
ஆரம்பகால, மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செப்டம்பர் மாதம் முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார். இரண்டு மீட்டர் சமூக தொலைதூர விதியை பின்பற்ற வேண்டி ஏற்பட்டால் பல பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை தோன்றும். மேலும் 2 மீட்டர் இடைவெளி என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.