புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2020

லண்டனில் பள்ளிகள் செப்டெம்பரில் திறக்கப்படுமா அதிரடியாக வரும் தகவல்கள்

இங்கிலாந்தில் அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளையும் கோடைகாலத்திற்கு முன்பு திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து குழந்தைகளும் செப்டம்பர் மாதத்திற்குள் வகுப்பிற்கு வருவார்கள் என்று எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் இரண்டு மீட்டர் விதி கைவிடப்படாவிட்டால் அது சாத்தியமில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்து வருகிறார்கள்.

ஆரம்பகால, மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செப்டம்பர் மாதம் முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார். இரண்டு மீட்டர் சமூக தொலைதூர விதியை பின்பற்ற வேண்டி ஏற்பட்டால் பல பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை தோன்றும். மேலும் 2 மீட்டர் இடைவெளி என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

கல்வியாண்டை புதிதாக தொடங்க உள்ள குழந்தைகள், கட்டாயம் விடுமுறைக்கு முன்னதாக ஒருமுறை என்றாலும் பள்ளி செல்லவேண்டும். அதுவே நல்லது என்று அரசு நினைக்கிறது. ஆனால் அது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. இதனால் பள்ளிகளை கோடை விடுமுறைக்காக மூடு முன்னர் 2 அல்லது 3 தினங்கள் மட்டும் திறக்க சில பாடசாலைகள் முடிவெடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.www.pungudutivuswiss.com

ad

ad