இந்நிலையில் குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டமை தொடர்பில் தவிசாளர் நிரோஷ் பொது உடமைக்கு சேதம் விளைவித்தார் எனக் குற்றம்சாட்டி கடந்த திங்கட்கிழமை முதல் கைது செய்வதற்கு அச்சுவேலி பொலிஸார் தீவிரமாக முயன்று வருகின்றார்கள்.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் கைதுக்குத் தடை கோரி எதிர்பார்க்கை பிணை விண்ணப்ப மனு தவிசாளர் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டது.
தவிசாளர் நிரோஷ் மீதான குற்றச்சாட்டு வழக்கை பொலிஸார் முன்னெடுக்கும் போது முழுமையான ஒத்துழைப்பை வழவங்குவதுடன், நீதிமன்றில் தவறாது முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த விண்ணப்பம் மீதான விசாரணை இன்று மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விண்ணப்பதாரர் நிரோஷுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டத்தை பொலிஸார் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் விண்ணப்பதாரர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், எதிர்பார்க்கை பிணைக்கான காரணத்தை எடுத்துரைத்தார். அதனால் விண்ணப்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்று, எதிர்பார்க்கை முன் பிணை வழங்கி கட்டளையிட்டது.